வால்பாறையில் அதிமுக செயல்வீரர் கூட்டம்: 15,000க்கும் மேற்பட்டவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது

கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுக செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 15,000க்கும் மேற்பட்டவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுக செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 15,000க்கும் மேற்பட்டவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.



வால்பாறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, தோட்டத் தொழிலாளர் பிரிவு தலைவர் வி. அமீது, நகர செயலாளர் மயில் கணேசன், பொன் கணேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சுமார் 500க்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.



கூட்டத்திற்கு முன்னதாக, வால்பாறை அரசு மருத்துவமனைக்கு எஸ்.பி. வேலுமணி இரண்டு குளிர்சாதனப் பெட்டிகளை வழங்கினார். இதையடுத்து, செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது.



கூட்டத்தில் பேசிய எஸ்.பி. வேலுமணி, "கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்துவிட்டோம். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் விழிப்புடன் இருந்து வெற்றி பெற உறுப்பினர்களும் தொண்டர்களும் பாடுபட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் அவர், "வால்பாறையில் 50 ஆண்டுகாலமாக இல்லாத வளர்ச்சியை அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளது. தாவரவியல் பூங்கா, படகு இல்லம், பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் சாலை அமைக்கும் பணி, நகராட்சி அலுவலகத்தை விரிவுபடுத்துதல் போன்ற பணிகள் மூலம் வால்பாறையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த கட்சி அதிமுக. இக்கட்சியை வீழ்த்த யாராலும் முடியாது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் ஒன்று சேர்ந்து வெற்றி பெற வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற வேட்பாளர் கார்த்திகேயன், ஐடி விங் சசிகுமார், சுடர் பாலு, சலாவுதீன், எம்.ஆர்.எஸ். மோகன், ஆர்.ஆர். பெருமாள், ஆர்.ஆர். சசிகுமார், பழனிச்சாமி, எஸ்.கே.எஸ். பாலு மற்றும் பல கட்சி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...