வால்பாறையில் அதிமுக செயல்வீரர் கூட்டம்: 15,000க்கும் மேற்பட்டவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது

கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுக செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 15,000க்கும் மேற்பட்டவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுக செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 15,000க்கும் மேற்பட்டவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.



வால்பாறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, தோட்டத் தொழிலாளர் பிரிவு தலைவர் வி. அமீது, நகர செயலாளர் மயில் கணேசன், பொன் கணேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சுமார் 500க்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.



கூட்டத்திற்கு முன்னதாக, வால்பாறை அரசு மருத்துவமனைக்கு எஸ்.பி. வேலுமணி இரண்டு குளிர்சாதனப் பெட்டிகளை வழங்கினார். இதையடுத்து, செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது.



கூட்டத்தில் பேசிய எஸ்.பி. வேலுமணி, "கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்துவிட்டோம். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் விழிப்புடன் இருந்து வெற்றி பெற உறுப்பினர்களும் தொண்டர்களும் பாடுபட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் அவர், "வால்பாறையில் 50 ஆண்டுகாலமாக இல்லாத வளர்ச்சியை அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளது. தாவரவியல் பூங்கா, படகு இல்லம், பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் சாலை அமைக்கும் பணி, நகராட்சி அலுவலகத்தை விரிவுபடுத்துதல் போன்ற பணிகள் மூலம் வால்பாறையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த கட்சி அதிமுக. இக்கட்சியை வீழ்த்த யாராலும் முடியாது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் ஒன்று சேர்ந்து வெற்றி பெற வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற வேட்பாளர் கார்த்திகேயன், ஐடி விங் சசிகுமார், சுடர் பாலு, சலாவுதீன், எம்.ஆர்.எஸ். மோகன், ஆர்.ஆர். பெருமாள், ஆர்.ஆர். சசிகுமார், பழனிச்சாமி, எஸ்.கே.எஸ். பாலு மற்றும் பல கட்சி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...