வால்பாறையில் அதிமுக செயல்வீரர் கூட்டம்: 15,000க்கும் மேற்பட்டவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது

கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுக செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 15,000க்கும் மேற்பட்டவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுக செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 15,000க்கும் மேற்பட்டவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.



வால்பாறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, தோட்டத் தொழிலாளர் பிரிவு தலைவர் வி. அமீது, நகர செயலாளர் மயில் கணேசன், பொன் கணேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சுமார் 500க்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.



கூட்டத்திற்கு முன்னதாக, வால்பாறை அரசு மருத்துவமனைக்கு எஸ்.பி. வேலுமணி இரண்டு குளிர்சாதனப் பெட்டிகளை வழங்கினார். இதையடுத்து, செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது.



கூட்டத்தில் பேசிய எஸ்.பி. வேலுமணி, "கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்துவிட்டோம். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் விழிப்புடன் இருந்து வெற்றி பெற உறுப்பினர்களும் தொண்டர்களும் பாடுபட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் அவர், "வால்பாறையில் 50 ஆண்டுகாலமாக இல்லாத வளர்ச்சியை அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளது. தாவரவியல் பூங்கா, படகு இல்லம், பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் சாலை அமைக்கும் பணி, நகராட்சி அலுவலகத்தை விரிவுபடுத்துதல் போன்ற பணிகள் மூலம் வால்பாறையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த கட்சி அதிமுக. இக்கட்சியை வீழ்த்த யாராலும் முடியாது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் ஒன்று சேர்ந்து வெற்றி பெற வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற வேட்பாளர் கார்த்திகேயன், ஐடி விங் சசிகுமார், சுடர் பாலு, சலாவுதீன், எம்.ஆர்.எஸ். மோகன், ஆர்.ஆர். பெருமாள், ஆர்.ஆர். சசிகுமார், பழனிச்சாமி, எஸ்.கே.எஸ். பாலு மற்றும் பல கட்சி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...