பொள்ளாச்சியில் ஓடையகுளம் கிராம நீர் பயனாளர் சங்கத் தேர்தல்: வேட்புமனுக்கள் தாக்கல்

பொள்ளாச்சி அருகே ஆழியார் பாசன திட்டத்தின் ஓடையகுளம் கிராம நீர் பயனாளர் சங்கத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தலைவர் மற்றும் 4 ஆட்சி மண்டல உறுப்பினர்களுக்கான தேர்தல் ஆகஸ்ட் 31 அன்று நடைபெறும்.



கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் பாசன திட்டத்தில் குளப்பத்துக்குளம் ஏரி மற்றும் வரத்து வாய்க்கால் மற்றும் ஓடையகுளம் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் மற்றும் 4 ஆட்சி மண்டல உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நடைபெற்றது. பொள்ளாச்சி சார் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் உமா மகேஸ்வரிடம் காலை முதல் இந்த தேர்தலில் போட்டியிடும் விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.



தற்போது வரை தலைவர் பதவிக்கு வேட்டைக்காரன் புதூர் பகுதி சேர்ந்த விசாகபதி, ஆட்சி மண்டல உறுப்பினர் பதவிகளுக்கு வேட்டைக்காரன்புதூர் பகுதியை சேர்ந்த நீலகண்டன், ஓடையக்குளம் பகுதி சேர்ந்த சந்துரு, ஆனைமலை பகுதி சேர்ந்த ராஜமாணிக்கம் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் ஆழியார் அணை பாசன சங்கத் தலைவர் செந்தில் தலைமையில் வேட்புமனு செய்தனர்.



தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நாளை பரிசீலனை செய்யப்பட்டு வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட உள்ளது. வரும் 31ம் தேதி காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று அன்று மாலையில் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தலைவர் பதவிக்கு ஒருவரும், நான்கு ஆட்சி மண்டல உறுப்பினர் பதவிக்கு தலா ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதால் இவர்கள் போட்டி யின்றி தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...