பொள்ளாச்சியில் ஓடையகுளம் கிராம நீர் பயனாளர் சங்கத் தேர்தல்: வேட்புமனுக்கள் தாக்கல்

பொள்ளாச்சி அருகே ஆழியார் பாசன திட்டத்தின் ஓடையகுளம் கிராம நீர் பயனாளர் சங்கத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தலைவர் மற்றும் 4 ஆட்சி மண்டல உறுப்பினர்களுக்கான தேர்தல் ஆகஸ்ட் 31 அன்று நடைபெறும்.



கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் பாசன திட்டத்தில் குளப்பத்துக்குளம் ஏரி மற்றும் வரத்து வாய்க்கால் மற்றும் ஓடையகுளம் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் மற்றும் 4 ஆட்சி மண்டல உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நடைபெற்றது. பொள்ளாச்சி சார் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் உமா மகேஸ்வரிடம் காலை முதல் இந்த தேர்தலில் போட்டியிடும் விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.



தற்போது வரை தலைவர் பதவிக்கு வேட்டைக்காரன் புதூர் பகுதி சேர்ந்த விசாகபதி, ஆட்சி மண்டல உறுப்பினர் பதவிகளுக்கு வேட்டைக்காரன்புதூர் பகுதியை சேர்ந்த நீலகண்டன், ஓடையக்குளம் பகுதி சேர்ந்த சந்துரு, ஆனைமலை பகுதி சேர்ந்த ராஜமாணிக்கம் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் ஆழியார் அணை பாசன சங்கத் தலைவர் செந்தில் தலைமையில் வேட்புமனு செய்தனர்.



தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நாளை பரிசீலனை செய்யப்பட்டு வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட உள்ளது. வரும் 31ம் தேதி காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று அன்று மாலையில் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தலைவர் பதவிக்கு ஒருவரும், நான்கு ஆட்சி மண்டல உறுப்பினர் பதவிக்கு தலா ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதால் இவர்கள் போட்டி யின்றி தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...