உடுமலையில் திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

உடுமலை அருகே கிழவன் காட்டூர் கிராமத்தில் திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் பொறுப்பாளர்கள் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கிழவன் காட்டூர் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமையில் நடத்தப்பட்டது.



கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.



டாக்டர் ராமதாஸ் வழிகாட்டுதலின்படி, உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகளுக்கான செயலாளர், தலைவர் மற்றும் மகளிர் அணி பொறுப்பாளர்களுக்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. அதைத் தொடர்ந்து நேர்காணலும் நடத்தப்பட்டது.



இந்த நிகழ்வில் பாமக மேற்கு மண்டல பொறுப்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கார்த்திகேயன், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருப்பூர் மேற்கு மாவட்ட தலைவர் சிங்காரவேல், அமைப்பு செயலாளர் மனோகரன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மின்னல் செந்தில், ஒன்றிய செயலாளர் சிவபாலு, ஊடகப் பேரவை உறுப்பினர் கனகராஜ், மகளிர் அணி பொறுப்பாளர்களான கல்பனா, கீர்த்தனா, நித்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...