உடுமலையில் திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

உடுமலை அருகே கிழவன் காட்டூர் கிராமத்தில் திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் பொறுப்பாளர்கள் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கிழவன் காட்டூர் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமையில் நடத்தப்பட்டது.



கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.



டாக்டர் ராமதாஸ் வழிகாட்டுதலின்படி, உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகளுக்கான செயலாளர், தலைவர் மற்றும் மகளிர் அணி பொறுப்பாளர்களுக்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. அதைத் தொடர்ந்து நேர்காணலும் நடத்தப்பட்டது.



இந்த நிகழ்வில் பாமக மேற்கு மண்டல பொறுப்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கார்த்திகேயன், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருப்பூர் மேற்கு மாவட்ட தலைவர் சிங்காரவேல், அமைப்பு செயலாளர் மனோகரன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மின்னல் செந்தில், ஒன்றிய செயலாளர் சிவபாலு, ஊடகப் பேரவை உறுப்பினர் கனகராஜ், மகளிர் அணி பொறுப்பாளர்களான கல்பனா, கீர்த்தனா, நித்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...