உடுமலையில் திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

உடுமலை அருகே கிழவன் காட்டூர் கிராமத்தில் திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் பொறுப்பாளர்கள் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கிழவன் காட்டூர் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமையில் நடத்தப்பட்டது.



கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.



டாக்டர் ராமதாஸ் வழிகாட்டுதலின்படி, உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகளுக்கான செயலாளர், தலைவர் மற்றும் மகளிர் அணி பொறுப்பாளர்களுக்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. அதைத் தொடர்ந்து நேர்காணலும் நடத்தப்பட்டது.



இந்த நிகழ்வில் பாமக மேற்கு மண்டல பொறுப்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கார்த்திகேயன், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருப்பூர் மேற்கு மாவட்ட தலைவர் சிங்காரவேல், அமைப்பு செயலாளர் மனோகரன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மின்னல் செந்தில், ஒன்றிய செயலாளர் சிவபாலு, ஊடகப் பேரவை உறுப்பினர் கனகராஜ், மகளிர் அணி பொறுப்பாளர்களான கல்பனா, கீர்த்தனா, நித்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...