கிணத்துக்கடவில் நியாயவிலைக் கடையை ஆய்வு செய்த பொள்ளாச்சி எம்.பி ஈஸ்வரசாமி

கோவை தெற்கு மாவட்டம் கிணத்துக்கடவில் பொள்ளாச்சி எம்.பி ஈஸ்வரசாமி நியாயவிலைக் கடையை ஆய்வு செய்தார். திமுக மாவட்ட செயலாளர் தளபதி முருகேசனும் உடனிருந்தார். வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரச்சாரமும் நடைபெற்றது.


கோவை: கோவை தெற்கு மாவட்டம் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றியம் மாஸ்திகவுண்டன்பதி நியாயவிலைக்கடையில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி அவர்களுடன் இணைந்து கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் இன்று ஆகஸ்ட் 19 ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின் போது திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் உடனிருந்தனர்.



இந்தியா கூட்டணி சார்பில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஈஸ்வரசாமி எம்.பி, இன்று கோவை தெற்கு மாவட்டம், கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி, கிணத்துக்கடவு மேற்கு ஒன்றியப் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.





இந்த நிகழ்வில் திமுக மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்த ஆய்வின் போது, நியாயவிலைக் கடையின் செயல்பாடுகள், பொருட்களின் தரம் மற்றும் விநியோகம் குறித்து எம்.பி ஈஸ்வரசாமி கேள்விகள் எழுப்பினார். மேலும், பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...