கிணத்துக்கடவில் நியாயவிலைக் கடையை ஆய்வு செய்த பொள்ளாச்சி எம்.பி ஈஸ்வரசாமி

கோவை தெற்கு மாவட்டம் கிணத்துக்கடவில் பொள்ளாச்சி எம்.பி ஈஸ்வரசாமி நியாயவிலைக் கடையை ஆய்வு செய்தார். திமுக மாவட்ட செயலாளர் தளபதி முருகேசனும் உடனிருந்தார். வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரச்சாரமும் நடைபெற்றது.


கோவை: கோவை தெற்கு மாவட்டம் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றியம் மாஸ்திகவுண்டன்பதி நியாயவிலைக்கடையில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி அவர்களுடன் இணைந்து கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் இன்று ஆகஸ்ட் 19 ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின் போது திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் உடனிருந்தனர்.



இந்தியா கூட்டணி சார்பில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஈஸ்வரசாமி எம்.பி, இன்று கோவை தெற்கு மாவட்டம், கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி, கிணத்துக்கடவு மேற்கு ஒன்றியப் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.





இந்த நிகழ்வில் திமுக மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்த ஆய்வின் போது, நியாயவிலைக் கடையின் செயல்பாடுகள், பொருட்களின் தரம் மற்றும் விநியோகம் குறித்து எம்.பி ஈஸ்வரசாமி கேள்விகள் எழுப்பினார். மேலும், பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...