பொள்ளாச்சி அருகே பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட பட்டா நிலங்களை அளவீடு செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் மனு

பொள்ளாச்சி அருகே புரவிபாளையத்தில் 3 ஆண்டுகளுக்கு முன் பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட பட்டா நிலங்களை அளவீடு செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையம் கிராமத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு 27 பழங்குடியின மக்களுக்கு அரசு சார்பில் வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால், பட்டா வழங்கி மூன்று ஆண்டுகள் கடந்தும் இதுவரை நில அளவீடு செய்து தரப்படவில்லை என்று தெரிகிறது.

இந்நிலையில், நில அளவீடு செய்து தர வலியுறுத்தி இன்று பொள்ளாச்சியில் விடுதலை சிறுத்தை கட்சியின் மண்டல துணைச் செயலாளர் பிரபு தலைமையில் பழங்குடியின மக்கள் சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யாவிடம் மனு அளித்தனர்.

நில அளவீடு செய்து தரக்கோரி பலமுறை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டனர். எனவே, நில அளவை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு விட வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சியினர் வலியுறுத்தினர்.

பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்த நில அளவீடு முக்கியமானது என்றும், இது அவர்களின் சமூக-பொருளாதார நிலையை உயர்த்த உதவும் என்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் தெரிவித்தனர். சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Newsletter

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...