பொள்ளாச்சி அருகே பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட பட்டா நிலங்களை அளவீடு செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் மனு

பொள்ளாச்சி அருகே புரவிபாளையத்தில் 3 ஆண்டுகளுக்கு முன் பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட பட்டா நிலங்களை அளவீடு செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையம் கிராமத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு 27 பழங்குடியின மக்களுக்கு அரசு சார்பில் வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால், பட்டா வழங்கி மூன்று ஆண்டுகள் கடந்தும் இதுவரை நில அளவீடு செய்து தரப்படவில்லை என்று தெரிகிறது.

இந்நிலையில், நில அளவீடு செய்து தர வலியுறுத்தி இன்று பொள்ளாச்சியில் விடுதலை சிறுத்தை கட்சியின் மண்டல துணைச் செயலாளர் பிரபு தலைமையில் பழங்குடியின மக்கள் சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யாவிடம் மனு அளித்தனர்.

நில அளவீடு செய்து தரக்கோரி பலமுறை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டனர். எனவே, நில அளவை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு விட வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சியினர் வலியுறுத்தினர்.

பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்த நில அளவீடு முக்கியமானது என்றும், இது அவர்களின் சமூக-பொருளாதார நிலையை உயர்த்த உதவும் என்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் தெரிவித்தனர். சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...