கோவை: நில மோசடி குறித்து அதிமுக எம்.எல்.ஏ மீது குடும்ப வாரிசுதாரர்கள் புகார்

கோவையில், சிங்காநல்லூர் அதிமுக எம்.எல்.ஏ மீது 30க்கும் மேற்பட்ட குடும்ப வாரிசுதாரர்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நில மோசடி புகார் அளித்துள்ளனர்.



Coimbatore: கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட வாரிசுதாரர்கள் தங்களுக்கு சொந்தமான பூர்வீக சொத்து தொடர்பாக புகார் அளித்துள்ளனர். அவர்களின் கூற்றுப்படி, கோவை மாவட்ட சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், அவரது உறவினர் மற்றும் ஒரு தனியார் நபர் ஆகியோர் இணைந்து இந்த மோசடியை செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

புகார் மனுவில், நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தபோதிலும், குறிப்பிட்ட நபர்கள் தொடர்ந்து சொத்துக்களை விற்பனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தை மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.



வாரிசுதாரர்களின் கூற்றுப்படி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காளிக்கோனாரின் வாரிசுதாரர்களுக்கு சொந்தமான பல கோடி மதிப்பிலான நிலத்தை, உயிருடன் இல்லாதவர்களை உயிருடன் இருப்பதாக காண்பித்து மோசடி செய்து அபகரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பான வழக்கு மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

தற்போது, "ஸ்ரீ சக்தி கார்டன்" என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றி வீட்டு மனைகளை விற்பனை செய்து வருவதாகவும், இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளனர். மோசடியாக வீட்டுமனைகளை விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன், அவருடைய உறவினர் மணிகண்டன் மற்றும் ஸ்ரீவாரி ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆகியோர் இணைந்து தங்களுடைய சொத்துக்களை திட்டமிட்டு மோசடி செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து ஏற்கனவே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

வாரிசுதாரர்கள், தங்களை மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். தங்கள் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், மேற்கூறிய மூவரும்தான் பொறுப்பு என்றும் எச்சரித்துள்ளனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...