முன்னாள் நீதியரசர் கற்பக விநாயகம் தோல் தான விண்ணப்பத்தை வழங்கினார்

கோவையில், முன்னாள் நீதியரசர் கற்பக விநாயகம் தோல் தான விண்ணப்பத்தை கங்கா மருத்துவமனை மருத்துவரிடம் வழங்கினார். அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் உள்ளிட்ட அமைப்புகள் தோல் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.


Coimbatore: கோவையில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் கௌரவ தலைவரும், முன்னாள் நீதியரசருமான கற்பக விநாயகம் தோல் தானம் செய்வதற்கான விண்ணப்பத்தை கங்கா மருத்துவமனை மருத்துவர் ராஜா சண்முகம் கிருஷ்ணனிடம் வழங்கினார்.

இந்த நிகழ்வு, கோவையில் உள்ள கங்கா தோல் தானம் மையம், அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம், வோல்ட் மலையாளி கவுன்சில் மற்றும் ரோட்டரி 3201 ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் தோல் தானம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடைபெற்றது.

முன்னாள் நீதியரசர் கற்பக விநாயகத்தின் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனத் தலைவர் ஆர்.கே.குமார், பொதுச் செயலாளர் வி.எச்.சுப்பிரமணியம், மகளிரணி தலைவி தேசிய ஒருங்கிணைப்பாளர் லதா அர்ஜூனன், மாநில தலைவர் ராஜேஷ்குமார், துணைத் தலைவர் செந்தில் குமார், சந்திரசேகர், குமார் தங்கவேல், சிவசக்தி மற்றும் கோல்டு மலையாளி கவுன்சில் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய முன்னாள் நீதியரசர் கற்பக விநாயகம், "தோல் தானம் குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியமானது. கண் தானம் போன்ற உறுப்பு தானங்கள் குறித்த விழிப்புணர்வு இருந்தாலும், தோல் தானம் பற்றி பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது. ஒருவர் மறைந்த பின்னும் தீக்காயம் பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க தோல் தானம் உதவுகிறது," என்று கூறினார்.

மேலும் அவர், "நாம் மறைந்த பின் செய்கின்ற தோல் தானத்தால் நாம் தெய்வமாகிறோம். எனவே பொதுமக்களுக்கு தோல் தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக முக்கியம்," என்று வலியுறுத்தினார்.

இந்த முயற்சி தோல் தானம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், மேலும் பலரை தோல் தானம் செய்ய ஊக்குவிக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...