முன்னாள் நீதியரசர் கற்பக விநாயகம் தோல் தான விண்ணப்பத்தை வழங்கினார்

கோவையில், முன்னாள் நீதியரசர் கற்பக விநாயகம் தோல் தான விண்ணப்பத்தை கங்கா மருத்துவமனை மருத்துவரிடம் வழங்கினார். அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் உள்ளிட்ட அமைப்புகள் தோல் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.


Coimbatore: கோவையில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் கௌரவ தலைவரும், முன்னாள் நீதியரசருமான கற்பக விநாயகம் தோல் தானம் செய்வதற்கான விண்ணப்பத்தை கங்கா மருத்துவமனை மருத்துவர் ராஜா சண்முகம் கிருஷ்ணனிடம் வழங்கினார்.

இந்த நிகழ்வு, கோவையில் உள்ள கங்கா தோல் தானம் மையம், அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம், வோல்ட் மலையாளி கவுன்சில் மற்றும் ரோட்டரி 3201 ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் தோல் தானம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடைபெற்றது.

முன்னாள் நீதியரசர் கற்பக விநாயகத்தின் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனத் தலைவர் ஆர்.கே.குமார், பொதுச் செயலாளர் வி.எச்.சுப்பிரமணியம், மகளிரணி தலைவி தேசிய ஒருங்கிணைப்பாளர் லதா அர்ஜூனன், மாநில தலைவர் ராஜேஷ்குமார், துணைத் தலைவர் செந்தில் குமார், சந்திரசேகர், குமார் தங்கவேல், சிவசக்தி மற்றும் கோல்டு மலையாளி கவுன்சில் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய முன்னாள் நீதியரசர் கற்பக விநாயகம், "தோல் தானம் குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியமானது. கண் தானம் போன்ற உறுப்பு தானங்கள் குறித்த விழிப்புணர்வு இருந்தாலும், தோல் தானம் பற்றி பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது. ஒருவர் மறைந்த பின்னும் தீக்காயம் பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க தோல் தானம் உதவுகிறது," என்று கூறினார்.

மேலும் அவர், "நாம் மறைந்த பின் செய்கின்ற தோல் தானத்தால் நாம் தெய்வமாகிறோம். எனவே பொதுமக்களுக்கு தோல் தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக முக்கியம்," என்று வலியுறுத்தினார்.

இந்த முயற்சி தோல் தானம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், மேலும் பலரை தோல் தானம் செய்ய ஊக்குவிக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...