முன்னாள் நீதியரசர் கற்பக விநாயகம் தோல் தான விண்ணப்பத்தை வழங்கினார்

கோவையில், முன்னாள் நீதியரசர் கற்பக விநாயகம் தோல் தான விண்ணப்பத்தை கங்கா மருத்துவமனை மருத்துவரிடம் வழங்கினார். அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் உள்ளிட்ட அமைப்புகள் தோல் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.


Coimbatore: கோவையில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் கௌரவ தலைவரும், முன்னாள் நீதியரசருமான கற்பக விநாயகம் தோல் தானம் செய்வதற்கான விண்ணப்பத்தை கங்கா மருத்துவமனை மருத்துவர் ராஜா சண்முகம் கிருஷ்ணனிடம் வழங்கினார்.

இந்த நிகழ்வு, கோவையில் உள்ள கங்கா தோல் தானம் மையம், அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம், வோல்ட் மலையாளி கவுன்சில் மற்றும் ரோட்டரி 3201 ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் தோல் தானம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடைபெற்றது.

முன்னாள் நீதியரசர் கற்பக விநாயகத்தின் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனத் தலைவர் ஆர்.கே.குமார், பொதுச் செயலாளர் வி.எச்.சுப்பிரமணியம், மகளிரணி தலைவி தேசிய ஒருங்கிணைப்பாளர் லதா அர்ஜூனன், மாநில தலைவர் ராஜேஷ்குமார், துணைத் தலைவர் செந்தில் குமார், சந்திரசேகர், குமார் தங்கவேல், சிவசக்தி மற்றும் கோல்டு மலையாளி கவுன்சில் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய முன்னாள் நீதியரசர் கற்பக விநாயகம், "தோல் தானம் குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியமானது. கண் தானம் போன்ற உறுப்பு தானங்கள் குறித்த விழிப்புணர்வு இருந்தாலும், தோல் தானம் பற்றி பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது. ஒருவர் மறைந்த பின்னும் தீக்காயம் பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க தோல் தானம் உதவுகிறது," என்று கூறினார்.

மேலும் அவர், "நாம் மறைந்த பின் செய்கின்ற தோல் தானத்தால் நாம் தெய்வமாகிறோம். எனவே பொதுமக்களுக்கு தோல் தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக முக்கியம்," என்று வலியுறுத்தினார்.

இந்த முயற்சி தோல் தானம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், மேலும் பலரை தோல் தானம் செய்ய ஊக்குவிக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...