விவசாயிகள் மீது காவல்துறை தாக்குதல்: தமிழக அரசு மீது விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு

கோவை காரமடை, பொள்ளாச்சியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி மறுப்பு, காவல்துறை தாக்குதல் குறித்து விவசாயிகள் சங்கம் கண்டனம். அரசின் நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.



Coimbatore: கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே கட்சி சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கம் எஸ்கேபி(என்பி) சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை காரமடை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி மறுத்து, காவல்துறை ஆய்வாளர்கள் விவசாயிகளை துன்புறுத்தியதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சங்கத்தின் தமிழக இணை ஒருங்கிணைப்பாளர் ஏ.எஸ்.பாபு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் காவல்துறையினரின் நடவடிக்கையை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.



பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்தின் பல இடங்களில் டிராக்டர் பேரணி அமைதியாக நடைபெற்று வருகிறது. ஆனால் கோவை மாவட்டத்தில் காரமடை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் காவல்துறை ஆய்வாளர்கள் ராஜசேகர், வெங்கடேஷ் ஆகியோர் டிராக்டரில் வந்த விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தி, வாகனங்களை பறிமுதல் செய்தனர். பெண் விவசாயிகளை இரவு 7.30 மணி வரை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர். பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது," என்று குற்றம்சாட்டினார்.

மேலும், "ஆகஸ்ட் 14-ம் தேதி நீதிமன்றம் வாகன பேரணி நடத்த அனுமதி அளித்திருந்தும், இரு காவல் ஆய்வாளர்கள் சட்ட விரோதமாகவும், நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையிலும் செயல்பட்டுள்ளனர். தமிழக விவசாயிகள் மீது காவல்துறையை ஏவி திமுக அரசு பழிவாங்குகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது," என்றார்.

"தவறு செய்த காவல் ஆய்வாளர்கள் மற்றும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், ஆகஸ்ட் 27-ம் தேதி திருச்சியில் நடைபெறும் சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை பொறுத்து அடுத்த கட்ட போராட்டங்களை தீவிரப்படுத்துவோம்," என பாண்டியன் எச்சரிக்கை விடுத்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...