உடுமலையில் திருமாவளவனின் 62வது பிறந்தநாள்: வி.சி.க வினர் மாணவர்களுக்கு உணவு வழங்கி கொண்டாட்டம்

உடுமலையில் தொல். திருமாவளவனின் 62வது பிறந்தநாளை முன்னிட்டு மகாத்மா காந்தி உண்டு உறைவிட பள்ளியில் வி.சி.க வினர் மாணவர்களுக்கு காலை உணவு மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தொல். திருமாவளவனின் 62வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தனர். மகாத்மா காந்தி உண்டு உறைவிட பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.



வி.சி.க துப்புறவு தொழிலாளர் மேம்பாட்டு தொழிற்சங்கம் சார்பில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் மாநில துணை செயலாளர் கு.விடுதலை மணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் சித்ரா க.ராதா, ஆர்.தேன்மொழி, கே.ஜெயந்தி, அறிவொளிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் மாணவர்களுக்கு உணவுகளை வழங்கினர்.



இந்த நிகழ்வின் போது, பெதம்பட்டியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, கட்சியில் இணைந்தார். அவருக்கு விடுதலை மணி பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

இந்த நிகழ்வில் பெதப்பம்பட்டி கார்த்திகேயன், கு.சக்திவேல், தேவிகா, சுமதி, ஜனிதா, ஹேமலதா, என்.ராஜமாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...