நீலகிரியில் யானைகள் பாதுகாப்புக்காக மின் கம்பிகள் மாற்றம் - டான்ஜெட்கோ நடவடிக்கை

நீலகிரி மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் மின்சாரம் தாக்கி இறப்பதைத் தடுக்க, டான்ஜெட்கோ 12 கிலோமீட்டர் தூரத்திற்கு ஏரியல் பஞ்ச் கேபிள்களை நிறுவுகிறது. இந்த திட்டம் ₹5 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள காப்புக் காடுகள் மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்தில் (எம்டிஆர்) மின் கம்பிகளை தொட்டதால் யானைகள் விபத்தாக மின்சாரம் தாக்கி இறக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்த நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ) முதுமலை புலிகள் காப்பகத்திற்குள் 12 கிலோமீட்டர் தூரத்திற்கு ஏரியல் பஞ்ச் கேபிள்களை நிறுவும் பணியை தொடங்கியுள்ளது.

₹5 கோடி செலவில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில், ஏரியல் பஞ்ச் கேபிள்கள் அல்லது ஏரியல் பண்டில்டு கேபிள்கள் என்று அழைக்கப்படும் இந்த மின் கம்பிகள் மின்சாரம் கடத்துவதற்கு பயன்படுத்தப்படும் மேற்பரப்பு மின் கம்பிகளாகும். ஆனால் இவை காப்பு பொருட்களால் இறுக்கமாக பிணைக்கப்பட்டிருப்பதால், குறிப்பாக யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என டாங்கெட்கோ அதிகாரிகள் தெரிவித்தனர்.

டான்ஜெட்கோவின் உயர் அதிகாரிகள் தி இந்து நாளிதழிடம் கூறுகையில், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தோரப்பள்ளி மற்றும் தேப்பக்காடு இடையே முதல் கட்டமாக ஏரியல் பஞ்ச் கேபிள்கள் நிறுவப்படுகின்றன என்றும், எதிர்காலத்தில் புலிகள் காப்பகம் மற்றும் நீலகிரி காப்புக் காடுகளில் உள்ள மின் கம்பிகளுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

"கடந்த ஆண்டுகளில், முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மின்சார உள்கட்டமைப்பை தற்செயலாக இழுத்து விழுத்துவதாலோ அல்லது தொடர்பு கொள்வதாலோ பல யானைகள் இறந்துள்ளன. எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் தடுக்க ஏரியல் பஞ்ச் கேபிள்கள் உதவும்," என்று அந்த அதிகாரி கூறினார்.

இந்த திட்டப் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. புலிகள் காப்பகத்திற்குள் நிறுவ வேண்டிய 653 கம்பங்களில் 324 கம்பங்கள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன. நீலகிரியில் சமீபத்தில் ஏற்பட்ட கனமழைக்குப் பிறகு, குறிப்பாக தொங்கிக் கொண்டிருக்கும் மின் கம்பிகளை கண்டறிவதில் டாங்கெட்கோவுடன் இணைந்து பணியாற்றி வருவதாக உயர் வனத்துறை அதிகாரிகளும் தெரிவித்தனர்.

"அறுந்து விழும் அபாயத்தில் உள்ள அல்லது தரைக்கு மிக அருகில் உள்ள, வனவிலங்குகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய மின் கம்பிகளை பற்றி டான்ஜெட்கோவிற்கு விரைவாக தெரிவிக்க வேண்டியதன் அவசியத்தை எங்கள் வனத்துறை ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளோம். விபத்து மின்சாரம் தாக்கி இறக்கும் யானைகளின் எண்ணிக்கையை குறைக்க தீவிரமாக பணியாற்றி வருகிறோம்," என்று முதுமலை புலிகள் காப்பக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...