மடத்துக்குளம் அருகே வழித்தட பிரச்னை: திமுகவினர் வாக்குவாதம்; விவசாயி தற்கொலை முயற்சி

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே வழித்தட பிரச்னையால் 100க்கும் மேற்பட்ட திமுகவினர் வாக்குவாதம். விவசாயி பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே மெட்ராத்தி ஊராட்சியில் வீரக்குமார் என்பவருக்கு 3.30 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு அருகில் மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் திமுகவைச் சேர்ந்த கௌதம் ஒரு ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார்.

கௌதம் தனது நிலத்திற்கு செல்ல வீரக்குமாரின் இடத்தில் வழித்தடம் உள்ளதாக கூறி வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தார். விசாரணைக்குப் பின், வருவாய் கோட்டாட்சியர் கௌதமுக்கு வழித்தடம் ஏற்படுத்தி தர மடத்துக்குளம் வட்டாட்சியர் மற்றும் சர்வே துறைக்கு உத்தரவிட்டார்.

வீரக்குமார் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இன்று கௌதமிற்கு ஆதரவாக 100க்கும் மேற்பட்ட திமுகவினர் மடத்துக்குளம் வட்டாட்சியர் மற்றும் சர்வே துறையினருடன் வீரக்குமார் இடத்துக்கு வந்தனர். வீரகுமார் தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரது உறவினர்கள் ஐந்து நாள் அவகாசம் கேட்டனர். இதற்கு கௌதம் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.





சுமார் 50க்கும் மேற்பட்ட நபர்கள் அத்துமீறி வீரகுமார் தரப்பில் உள்ள பெண்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென வீரக்குமார் உறவினர் கனகராஜ் என்பவர் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தற்கொலை முயற்சி செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் செல்வராணி என்பவரும் பூச்சிக்கொல்லி மருந்தை குடிக்க முயன்றதால் பரபரப்பு அதிகரித்தது.



சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை டிஎஸ்பி சுகுமாரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். தற்சமயம் வீரக்குமார் தரப்பில் வழியாக செல்லும் வழித்தடம் எடுப்பதற்கு ஐந்து நாள் அவகாசம் வழங்கியுள்ளதாக வருவாய்த்துறை மற்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் மடத்துக்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...