சுதந்திர தினத்தையொட்டி கோவையில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை கரும்புக்கடையில் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் போதைப் பொருள் எதிர்ப்பு பிரச்சாரம் நடைபெற்றது. உதவி ஆணையாளர் அஜய் தங்கம் முன்னிலையில் பொதுமக்கள் உறுதிமொழி எடுத்தனர்.


Coimbatore: கோவை கரும்புக்கடை பகுதியில் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு போதைப் பொருள் எதிர்ப்பு பிரச்சாரம் இந்தியா தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக உதவி ஆணையாளர் அஜய் தங்கம் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் மாணவர்கள், மாணவிகள் முதல் பெரியவர்கள் வரை உதவி ஆணையாளர் முன்னிலையில் போதைப் பொருள் தடுப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். சிறுபான்மை துறை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் முகமது ஹாரீஸ், இந்தியா தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்ட செயலாளர் முஹம்மது ஷபீர், துணைத் தலைவர் முஹம்மது பசீர், மதரஸா தலைமை ஆசிரியர் அப்துல் அஜீஸ் ஆகியோர் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.



பின்னர் மாணவ, மாணவிகள் போதைப் பொருட்களுக்கு எதிராகவும், போதைப் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பல்வேறு வயதினரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



தொடர்ந்து, அந்தப் பகுதி முழுவதும் மாணவ, மாணவிகள் மற்றும் பெரியவர்கள் போதைப் பொருட்களுக்கு எதிராக கையில் பதாகைகள் ஏந்தி கோஷமிட்டு ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலம் பொதுமக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது.



இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் போதைப் பொருட்களின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, இளைஞர்களை போதைப் பொருட்களிலிருந்து விலகி இருக்க ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்வு, சமூகத்தில் ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...