டெங்கு தடுப்பு: மக்களின் ஒத்துழைப்பு அவசியம் - கோவை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

கோவை மாவட்டத்தில் மழைக்காலத்தில் டெங்கு பரவலைத் தடுக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கிராமசபை கூட்டத்தில் அறிவுறுத்தினார்.


கோவை: கோவை மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவுறுத்தினார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம், சூலூர் ஊராட்சி ஒன்றியம், கிட்டாம்பாளையம் ஊராட்சி, வடுகம்பாளையம் மாகாளியம்மன் கோயில் அருகே உள்ள மைதானத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பேசினார்.

அவர் தனது உரையில், "சுதந்திர போராட்ட வீரர்கள் நாட்டின் விடுதலைக்காக மட்டுமின்றி மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்டனர். மக்களுக்கான ஆட்சியாக, சுதந்திரமான ஆட்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், உள்ளாட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டு இதுபோன்ற கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன" என்றார்.

மேலும், மழைக்காலத்தில் டெங்கு காய்ச்சல் பரவக்கூடிய நிலை ஏற்படும் என்பதால், வீடுகளில் தண்ணீர் சேகரிக்கும் தொட்டிகள், போல்கள், குடங்கள் போன்றவற்றை முழுமையாக மூடி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். கொசு மருந்து அடிக்கும் பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இக்கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை தலைமை அலுவலர்கள் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், சூரிய மின் உற்பத்தி செய்து, சிறப்பு ஊராட்சிக்கான ISO தரச்சான்றிதழை இந்த ஊராட்சி பெற்றுள்ளதற்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...