டெங்கு தடுப்பு: மக்களின் ஒத்துழைப்பு அவசியம் - கோவை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

கோவை மாவட்டத்தில் மழைக்காலத்தில் டெங்கு பரவலைத் தடுக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கிராமசபை கூட்டத்தில் அறிவுறுத்தினார்.


கோவை: கோவை மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவுறுத்தினார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம், சூலூர் ஊராட்சி ஒன்றியம், கிட்டாம்பாளையம் ஊராட்சி, வடுகம்பாளையம் மாகாளியம்மன் கோயில் அருகே உள்ள மைதானத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பேசினார்.

அவர் தனது உரையில், "சுதந்திர போராட்ட வீரர்கள் நாட்டின் விடுதலைக்காக மட்டுமின்றி மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்டனர். மக்களுக்கான ஆட்சியாக, சுதந்திரமான ஆட்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், உள்ளாட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டு இதுபோன்ற கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன" என்றார்.

மேலும், மழைக்காலத்தில் டெங்கு காய்ச்சல் பரவக்கூடிய நிலை ஏற்படும் என்பதால், வீடுகளில் தண்ணீர் சேகரிக்கும் தொட்டிகள், போல்கள், குடங்கள் போன்றவற்றை முழுமையாக மூடி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். கொசு மருந்து அடிக்கும் பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இக்கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை தலைமை அலுவலர்கள் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், சூரிய மின் உற்பத்தி செய்து, சிறப்பு ஊராட்சிக்கான ISO தரச்சான்றிதழை இந்த ஊராட்சி பெற்றுள்ளதற்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...