உடுமலையில் 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாஜக சார்பில் வாகன பேரணி

உடுமலையில் 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நகர பாஜக சார்பில் வாகன பேரணி நடைபெற்றது. காந்தி மற்றும் காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பல்வேறு பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நகர பாஜக சார்பில் வாகன பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்வு பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்கவும், மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி ஆகியோரின் அறிவுரைப்படியும் ஏற்பாடு செய்யப்பட்டது.



குட்டைதிடல் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு நகரத் தலைவர் கண்ணாயிரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



பின்னர், மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிஸ்வரி கந்தசாமி வாகன பேரணியை துவக்கி வைத்தார்.



பேரணி குட்டைதிடலில் துவங்கி, சதாசிவம் வீதி, நெல்லுக்கடை வீதி, பொள்ளாச்சி ரோடு வழியாக சென்றது.



பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.



பின்னர் தளி ரோடு ரயில்வே மேம்பாலம் வழியாக மீண்டும் குட்டைதிடலில் பேரணி நிறைவடைந்தது.

இந்த நிகழ்வில் மாவட்ட வழக்கறிஞர் பார்வையாளர் பி என் ராஜேந்திரன், பொதுச் செயலாளர் ராதிகா, நகர பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், தம்பிதுரை, மாவட்ட பிரச்சார அணி செயலாளர் சின்ராஜ், நகரத் துணைத் தலைவர் உமா குப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், நகர செயலாளர்கள், இளைஞரணி நிர்வாகிகள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், வார்டு செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள் உட்பட பலரும் பங்கேற்றனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...