தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 78வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. துணைவேந்தர் கௌரவ கர்னல் முனைவர் வெ. கீதாலட்சுமி தேசியக்கொடியேற்றி உரையாற்றினார். பல்கலைக்கழகத்தின் சாதனைகள் சிறப்பிக்கப்பட்டன.


Coimbatore: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 78வது சுதந்திர தின விழா 15.08.2024 அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.





பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரவ கர்னல் முனைவர் வெ. கீதாலட்சுமி தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தி, சுதந்திர தின விழா உரையாற்றினார்.

துணைவேந்தர் தனது உரையில், சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்தார். 78வது சுதந்திர தினத்தின் "விக்சித் பாரத்" என்ற முழக்கத்தை வலியுறுத்தி, அது பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் நல்லாட்சி ஆகியவற்றை குறிக்கும் என்றார்.



கடந்த 50 ஆண்டுகளில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 929 பயிர் வகைகள், 1500 தொழில்நுட்பங்கள், 150 இயந்திரங்களை உருவாக்கி, இந்தியாவின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கு பங்களித்துள்ளதாக துணைவேந்தர் பெருமிதத்துடன் தெரிவித்தார். இந்த ஆண்டு மட்டும் 24 புதிய பயிர் வகைகள், 7 பண்ணை தொழில்நுட்பங்கள், 5 பண்ணை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வெளியிடப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகத்தை இந்தியாவின் முதன்மை நிறுவனமாக உயர்த்த ஆசிரியர்களும் மாணவர்களும் உறுதியேற்க வேண்டும் என்று துணைவேந்தர் அழைப்பு விடுத்தார்.



விழாவில் பல்கலைக்கழக அதிகாரிகள், துறைத் தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் கலந்து கொண்டனர். தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பும் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை மாணவர் நல மைய முதன்மையர் முனைவர் நா. மரகதம் மேற்கொண்டார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...