பொள்ளாச்சியில் திமுக மாணவரணி சார்பில் ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

பொள்ளாச்சியில் திமுக மாணவரணி சார்பில் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி இந்த சேவையை தொடங்கி வைத்தார். ஆதரவற்ற சடலங்களுக்கு இலவச சேவையும், மற்றவர்களுக்கு சலுகை கட்டணமும் வழங்கப்படும்.



Coimbatore: பொள்ளாச்சியில் நகர திமுக மாணவரணி சார்பில் புதிய ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி தொடங்கி வைத்தார்.

பொள்ளாச்சி நகர திமுக மாணவர் அணி துணை அமைப்பாளர் சபரி முத்துவீரன் ஏற்பாட்டில் இந்த ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவமனையில் இருந்து இந்த சேவை தொடங்கப்பட்டது. தொடக்க விழாவிற்குப் பின் அரசு மருத்துவமனையில் அன்னதானமும் வழங்கப்பட்டது.



இந்த நிகழ்வில் பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், துணை செயலாளர் தர்மராஜ், நகர மன்ற உறுப்பினர் பெருமாள் உள்ளிட்ட திமுக நகர மாணவரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆம்புலன்ஸ் சேவை ஏற்பாட்டாளர் தெரிவித்ததாவது: "ஆதரவற்ற சடலங்களை கொண்டு செல்ல இலவசமாக ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்படும். மற்றவர்களுக்கு சலுகை அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை மூலம் பொதுமக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என நம்புகிறோம்."

இந்த முயற்சி பொள்ளாச்சி பகுதி மக்களுக்கு அவசர கால மருத்துவ சேவைகளை அணுகுவதில் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...