கோவையில் 78வது சுதந்திர தின விழா: மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியேற்றி விழா தொடக்கம்

கோவை வ.உ.சி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தேசியக் கொடியேற்றி, காவல்துறையின் அணிவகுப்பை ஏற்று, மூவர்ண பலூன்களை பறக்கவிட்டார். பல்வேறு துறையினருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


Coimbatore: கோவை வ.உ.சி மைதானத்தில் 78வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து, சுதந்திர தின விழாவில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக் கொண்டார். பின்னர், குழந்தைகளுடன் இணைந்து மூவர்ண பலூன்களை வானத்தில் பறக்கவிட்டார்.



விழாவின் ஒரு பகுதியாக, கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த 83 பேருக்கும், அரசு அலுவலர்கள் 140 பேருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் மற்றும் மொழிப் போராட்டத் தியாகிகள் உள்ளிட்ட பலரும் இவ்விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.



விழாவை மேலும் சிறப்பிக்கும் வகையில், பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவரும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, வாஹா எல்லையில் காவல்துறையினரின் சிறப்பு அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.



இவ்வாறு கோவையில் 78வது சுதந்திர தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...