தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேசிய நூலகர் தினவிழா கொண்டாட்டம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 12, 2024 அன்று தேசிய நூலகர் தினவிழா கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கு வாசிப்பின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டதுடன், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நூலகத்தில் தேசிய நூலகர் தினவிழா ஆகஸ்ட் 12, 2024 அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்திய நூலகத் தந்தை முனைவர் எஸ்.ஆர்.இரங்கநாதனின் பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த விழா நடைபெற்றது.

மாணவர் நல மையத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்த விழாவில், மாணவர்கள் நூலகம் மற்றும் நூல்களின் சிறப்பை அறிந்து கொள்ளவும், வாசிப்பின் நன்மைகளை உணரவும் வாய்ப்பளிக்கப்பட்டது. மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், நூலக வருகையை அதிகரிக்கவும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.



மாணவர் நல மைய முதன்மையர் முனைவர் நா.மரகதம் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். அவர் தமது உரையில் வாசிப்பின் முக்கியத்துவத்தையும், அதன் மூலம் பெறப்படும் ஞானத்தின் பயன்களையும் எடுத்துரைத்தார். கோவை எஸ்.என்.வி குளோபல் பள்ளியின் ஆங்கில ஆசிரியரும் முதல்வருமான முனைவர் சி.சாம்சன், நூலகத்தின் முக்கியத்துவத்தையும் நூலகர்களின் பெருமைகளையும் மாணவர்களுக்கு விளக்கினார்.



மண்ணியல் பேராசிரியரும் நூலகப் பொறுப்பாளருமான முனைவர் கே.எம்.செல்லமுத்து வரவேற்புரை நிகழ்த்தினார். ஆங்கிலப் பேராசிரியர் முனைவர் கே.தங்கராஜ் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற நூலகர்களான பேராசிரியர் கே.பாலசுப்ரமணியன், ஆர்.போரையன், முனைவர் கே.பெருமாள்சாமி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில், நூலகர் (பொறுப்பு) முனைவர் சி.ராணி நன்றியுரை வழங்கினார். இந்த விழா மாணவர்களிடையே வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, நூலகப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...