பொள்ளாச்சி அருகே பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் திடீர் வெள்ளப்பெருக்கு - பக்தர்கள் அவசரமாக வெளியேற்றம்

பொள்ளாச்சி அருகே பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பூஜை நடந்துகொண்டிருந்தபோது, பக்தர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தற்காலிகமாக கோயிலில் தரிசனம் தடை செய்யப்பட்டுள்ளது.



கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பக்தர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

பொள்ளாச்சிக்கு அருகில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயில். இக்கோயில் ஆற்றின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால், இப்பகுதி மக்கள் அதிகளவில் வழிபட வருவது வழக்கம். இன்று காலை வழக்கம்போல் நடை திறக்கப்பட்டு, ஆஞ்சநேயருக்கு பூஜைகள் நடைபெற்றன. அப்போது பக்தர்கள் பலரும் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.



நேற்று இரவு ஆழியார் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக, பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலின் தரைமட்ட பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் கோயிலுக்குள் தரிசனம் செய்துகொண்டிருந்த பக்தர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

தற்போது பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கோயிலில் சாமி தரிசனம் செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...