நிலகிரி மாவட்டத்தில் தற்போது பலாப் பழ சீசனை முன்னிட்டு பரவலாக பலா பழங்கள் காய்த்துள்ளன. இவற்றின் வாசனை வனப் பகுதிக்குள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கும் வீசுவதால் வனத்திற்குள் உள்ள காட்டு யானைகள் அவ்வப்போது குடியிருப்புகள் பகுதியிலும், சுற்றுலாப் பகுதிகளிலும் நுழைவது வழக்கமாகிவிட்டது.
இந்நிலையில், குன்னூர் பர்லியார் சுற்றுலாப் பகுதியில் குட்டியுடன் வந்த நான்கு காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள பலாபழங்களை உண்பதற்காக முகாமிட்டன.
இதனால் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்து வாகனங்களிலும், அப்பகுதியில் இருந்த தேனீர் கடைகளிலும் தஞ்சமடைந்தனர். இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் தேனீர் கடை வைத்துள்ள உள்ளூர் வாசிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் நிண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்பு யானைகளை வனப்பகுதிக்குள் அனுப்பினர்.
இந்நிலையில், குன்னூர் பர்லியார் சுற்றுலாப் பகுதியில் குட்டியுடன் வந்த நான்கு காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள பலாபழங்களை உண்பதற்காக முகாமிட்டன.
இதனால் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்து வாகனங்களிலும், அப்பகுதியில் இருந்த தேனீர் கடைகளிலும் தஞ்சமடைந்தனர். இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் தேனீர் கடை வைத்துள்ள உள்ளூர் வாசிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் நிண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்பு யானைகளை வனப்பகுதிக்குள் அனுப்பினர்.