கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் 27.44 லட்சம் வாக்காளர்களுக்கு 3540 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.


Coimbatore: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் வண்ணம் தேர்தல் ஆணையம் சார்பிலும் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 27,44,472 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 3540 வாக்குப்பதிவு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ஒரு மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.




கோவையில் 182 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.




பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில் தேர்தல் அலுவலர்கள் மாதிரி வாக்கினை செலுத்தி அனைத்தும் சரியாக உள்ளது என்பதை உறுதி செய்தனர். மேலும் அரசியல் கட்சி பிரமுகர்களின் ஓரிரு சந்தேகங்களையும் தீர்த்து வைத்தனர்.




இதனை அடுத்து காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்குகிறது. பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்கினை செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அந்தந்த வாக்குப்பதிவு மையங்களில் செய்யப்பட்டுள்ளன. குடிநீர் வசதி, நிழல் வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வாக்காளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.




மாவட்ட நிர்வாகம் அனைத்து வாக்காளர்களும் தங்களது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

Newsletter

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...