உடுமலையில் விவசாயிகளை அவதூறாக பேசியவர்களை கைது செய்யக் கோரி 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வாளவாடியில் விவசாயிகளை மாபியா கும்பல், கனிம வள கொள்ளையர்கள் என கூறிய நபர்களை கைது செய்யக்கோரி 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வண்டல் மண் எடுப்பதை தடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வாளவாடி ஊராட்சி பகுதியில் விவசாயிகளை மாபியா கும்பல், கனிம வள கொள்ளையர்கள் என கூறிய நபர்களை கைது செய்யக்கோரி 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சில தினங்களுக்கு முன் வாளவாடி ஊராட்சியில் உள்ள சப்பட்டியார் குளத்தில் விவசாயிகள் முறையான அனுமதி பெற்று வண்டல் மண் எடுத்து வந்தனர். இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வண்டல் மண் முறையான அனுமதி இல்லாமல் எடுக்கப்படுவதாக காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, அதிகாரிகள் வண்டல் மண் எடுப்பதை தடுத்து நிறுத்தினர்.



பின்னர், விவசாயிகளை மாபியா கும்பல் மற்றும் கனிம வள கொள்ளையர்கள் என்று கூறி, பணம் பறிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டதாகவும், வண்டல் மண் எடுக்கும் பணியை தடுத்து நிறுத்திய நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தளி காவல் நிலையத்தில் விவசாயிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், விவசாயிகளை தரக்குறைவாக பேசியதற்கும், மாபியா கும்பல், கனிம வளக் கொள்ளையர்கள் என கூறியதற்கும், வண்டல் மண் எடுப்பதை தடுத்து நிறுத்திய நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும் 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாளவாடி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளை தரக்குறைவாக பேசிய நபர்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும், விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி இருந்தும் மூன்று நாட்கள் வண்டல் மண் எடுக்க முடியாத காரணத்தால், வண்டல் மண் எடுக்க கூடுதல் நாட்கள் அனுமதி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

உடுமலை அருகே வாளவாடியில் நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Newsletter

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...