உடுமலையில் விவசாயிகளை அவதூறாக பேசியவர்களை கைது செய்யக் கோரி 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வாளவாடியில் விவசாயிகளை மாபியா கும்பல், கனிம வள கொள்ளையர்கள் என கூறிய நபர்களை கைது செய்யக்கோரி 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வண்டல் மண் எடுப்பதை தடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வாளவாடி ஊராட்சி பகுதியில் விவசாயிகளை மாபியா கும்பல், கனிம வள கொள்ளையர்கள் என கூறிய நபர்களை கைது செய்யக்கோரி 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சில தினங்களுக்கு முன் வாளவாடி ஊராட்சியில் உள்ள சப்பட்டியார் குளத்தில் விவசாயிகள் முறையான அனுமதி பெற்று வண்டல் மண் எடுத்து வந்தனர். இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வண்டல் மண் முறையான அனுமதி இல்லாமல் எடுக்கப்படுவதாக காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, அதிகாரிகள் வண்டல் மண் எடுப்பதை தடுத்து நிறுத்தினர்.



பின்னர், விவசாயிகளை மாபியா கும்பல் மற்றும் கனிம வள கொள்ளையர்கள் என்று கூறி, பணம் பறிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டதாகவும், வண்டல் மண் எடுக்கும் பணியை தடுத்து நிறுத்திய நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தளி காவல் நிலையத்தில் விவசாயிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், விவசாயிகளை தரக்குறைவாக பேசியதற்கும், மாபியா கும்பல், கனிம வளக் கொள்ளையர்கள் என கூறியதற்கும், வண்டல் மண் எடுப்பதை தடுத்து நிறுத்திய நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும் 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாளவாடி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளை தரக்குறைவாக பேசிய நபர்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும், விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி இருந்தும் மூன்று நாட்கள் வண்டல் மண் எடுக்க முடியாத காரணத்தால், வண்டல் மண் எடுக்க கூடுதல் நாட்கள் அனுமதி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

உடுமலை அருகே வாளவாடியில் நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Newsletter

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...