போதை ஒழிப்பு நடவடிக்கை வரவேற்கத்தக்கது - மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன்

கோவை விமான நிலையத்தில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். போதை ஒழிப்பு, ஜவுளித்துறை மற்றும் பங்களாதேஷ் உறவுகள் குறித்து கருத்து தெரிவித்தார்.



கோவை: கோவை விமான நிலையத்தில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.

போதை ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "போதை ஒழிப்பு நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. கஞ்சா அதிகமாக பிடிபட்டது என்று சொன்னால், கஞ்சா நடமாட்டம் அதிகமாகிறது என்று பொருள். அதனை கட்டுப்படுத்துகின்ற அனைத்து நடவடிக்கைகளையும் பார்க்க வேண்டும். முதல்வர் அவர்கள் கஞ்சாவையும் இதர போதை வஸ்துகளையும் ஒழிக்க எடுக்கின்ற அத்தனை முயற்சிகளையும் நான் வரவேற்கிறேன். அனைவரும் வரவேற்க வேண்டும்," என்றார்.

ஜவுளித்துறை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, "தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி வருகிறது. இது ஜவுளித் தொழில் வெற்றி பெறுவதற்கு உதவுவதாக அமையாது. ஜவுளித்துறைக்கு அதிகமான உதவிகளை மாநில அரசு செய்தால்தான் இந்தத் தொழில் காலத்தை கடந்து நிற்கும். உலகம் முழுவதும் ஜவுளித் தொழில் வளர்ந்து வருகிறது. பங்களாதேஷில் இருந்து வியட்நாம் வரை இன்றைக்கு ஜவுளித் தொழில் பிரமாண்டமாக இருந்து வருகிறது. பர்மாவில் கூட ஜவுளித் துறையில் புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது," என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர், "நம்முடைய பகுதியை விட்டு ஜவுளித் தொழில் வேறு நாட்டிற்கோ அல்லது வேறு மாநிலத்திற்கோ சென்று விடக்கூடாது என்று நினைத்தால், மாநில அரசு ஜவுளித் துறை சார்ந்த அத்தனை பேரையும் அழைத்து அவர்களது குறைகளை முழுமையாக கேட்டு உரிய உதவிகளை செய்ய வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

பங்களாதேஷ் உறவுகள் குறித்து பேசிய ஆளுநர், "பங்களாதேஷுடன் நீண்ட நெடிய உறவுகள் இருந்த போதிலும், எப்பொழுதெல்லாம் பங்களாதேஷில் மதவாத சக்திகள் கை ஓங்குகிறதோ, அப்பொழுதெல்லாம் நம்முடைய தேசத்தோடு இருக்கின்ற நெருக்கமான உறவுகளுக்கு சவால் வருகிறது. அதனை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். உலக அமைதிக்கு பங்களாதேஷும் இந்திய உறவும் மிகவும் முக்கியமானவை. இந்த உறவு மேலும் வலுப்பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்றார்.

பொன் மாணிக்கவேல் வழக்கு பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, "சிலை வழக்கு எந்த சூழலில் ஏற்பட்டது என தெரியவில்லை. எந்த அளவுக்கு முடிவு பெற்றுள்ளது என்பதை அறிந்த பிறகு பொறுத்திருந்து பார்ப்போம்," என்று பதிலளித்தார்.

Newsletter

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...