போதை ஒழிப்பு நடவடிக்கை வரவேற்கத்தக்கது - மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன்

கோவை விமான நிலையத்தில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். போதை ஒழிப்பு, ஜவுளித்துறை மற்றும் பங்களாதேஷ் உறவுகள் குறித்து கருத்து தெரிவித்தார்.



கோவை: கோவை விமான நிலையத்தில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.

போதை ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "போதை ஒழிப்பு நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. கஞ்சா அதிகமாக பிடிபட்டது என்று சொன்னால், கஞ்சா நடமாட்டம் அதிகமாகிறது என்று பொருள். அதனை கட்டுப்படுத்துகின்ற அனைத்து நடவடிக்கைகளையும் பார்க்க வேண்டும். முதல்வர் அவர்கள் கஞ்சாவையும் இதர போதை வஸ்துகளையும் ஒழிக்க எடுக்கின்ற அத்தனை முயற்சிகளையும் நான் வரவேற்கிறேன். அனைவரும் வரவேற்க வேண்டும்," என்றார்.

ஜவுளித்துறை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, "தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி வருகிறது. இது ஜவுளித் தொழில் வெற்றி பெறுவதற்கு உதவுவதாக அமையாது. ஜவுளித்துறைக்கு அதிகமான உதவிகளை மாநில அரசு செய்தால்தான் இந்தத் தொழில் காலத்தை கடந்து நிற்கும். உலகம் முழுவதும் ஜவுளித் தொழில் வளர்ந்து வருகிறது. பங்களாதேஷில் இருந்து வியட்நாம் வரை இன்றைக்கு ஜவுளித் தொழில் பிரமாண்டமாக இருந்து வருகிறது. பர்மாவில் கூட ஜவுளித் துறையில் புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது," என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர், "நம்முடைய பகுதியை விட்டு ஜவுளித் தொழில் வேறு நாட்டிற்கோ அல்லது வேறு மாநிலத்திற்கோ சென்று விடக்கூடாது என்று நினைத்தால், மாநில அரசு ஜவுளித் துறை சார்ந்த அத்தனை பேரையும் அழைத்து அவர்களது குறைகளை முழுமையாக கேட்டு உரிய உதவிகளை செய்ய வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

பங்களாதேஷ் உறவுகள் குறித்து பேசிய ஆளுநர், "பங்களாதேஷுடன் நீண்ட நெடிய உறவுகள் இருந்த போதிலும், எப்பொழுதெல்லாம் பங்களாதேஷில் மதவாத சக்திகள் கை ஓங்குகிறதோ, அப்பொழுதெல்லாம் நம்முடைய தேசத்தோடு இருக்கின்ற நெருக்கமான உறவுகளுக்கு சவால் வருகிறது. அதனை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். உலக அமைதிக்கு பங்களாதேஷும் இந்திய உறவும் மிகவும் முக்கியமானவை. இந்த உறவு மேலும் வலுப்பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்றார்.

பொன் மாணிக்கவேல் வழக்கு பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, "சிலை வழக்கு எந்த சூழலில் ஏற்பட்டது என தெரியவில்லை. எந்த அளவுக்கு முடிவு பெற்றுள்ளது என்பதை அறிந்த பிறகு பொறுத்திருந்து பார்ப்போம்," என்று பதிலளித்தார்.

Newsletter

ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும்: கோவையில் கிருஷ்ணசாமி

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குடும்பத்தினர் மீதா...

தங்க விலை உயர்வு: வரிச்சட்ட மாற்றம் கோரி கோவை நகை உற்பத்தியாளர்கள்

தங்க விலை உயர்வால் மூலதன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம், வரிச்சட்ட மாற்றங்கள்...

பேரூர் டி.எஸ்.பி நடப்பயண ரோந்து; பொதுமக்களிடம் குறைகள் கேட்பு

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பேரூர் டி.எஸ்.பி கால்நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்...

கூடலூரில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ சுனில் ஆனந்த்

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சுனில் ஆனந்த், பழுதடைந்த குடிநீர் தொட...

சரவணம்பட்டியில் கையகப்படுத்தப்பட்ட 73 வாகனங்கள்; உரிமையாளர்களுக்கு அழைப்பு

கோவை சரவணம்பட்டி காவல் நிலைய எல்லையில் கையகப்படுத்தப்பட்ட 73 இருசக்கர வாகனங்களை உரிய ஆவணங்களுடன் வந்து பெற்றுக்கொள்ள பொத...

நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வாய்ப்பு

கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று கோவை உட்பட 10 மாவட்...