கோவையில் தென்மேற்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆணையர் ஆலோசனை

கோவை மாநகராட்சி ஆணையர் M சிவகுரு பிரபாகரன் தலைமையில், தென்மேற்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரம் கலையரங்க கூட்டரங்கில் தென்மேற்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் M சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் தெரிவிக்கையில், தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாகவும், அதன்படி தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் கூறினார். மேலும், தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 12.08.2024 முதல் 17.08.2024 வரை தமிழ்நாட்டில் பரவலாக மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் மழை தொடர்பான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும், தண்ணீரை வெளியேற்றும் மின் மோட்டார்கள் மற்றும் மரம் அறுக்கும் இயந்திரங்களை தயார் நிலையிலும் கூடுதலாகவும் வைத்திருக்க வேண்டும் என்றும் ஆணையர் அறிவுறுத்தினார்.

மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் சுகாதாரத்தை பேணிக் காக்கும் வகையில் விரைவாக தூய்மை பணியினை மேற்கொள்ளுவதுடன், தேவையான இடங்களில் மருத்துவ முகாம்களையும் நடத்துவதற்கு சுகாதாரத் துறையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார். மேலும், மாநகராட்சிக்குட்பட்ட தாழ்வான பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களை உடனடியாக மீட்டு முகாம்களில் தங்க வைப்பதுடன், அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை முழுமையாக நிறைவேற்றிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் K சிவகுமார், மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், மாநகர நல அலுவலர் (பொ) மருபூபதி, நகரமைப்பு அலுவலர் குமார், துணை தலைமைப் பொறியாளர்கள், மண்டல உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், மண்டல சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...