பொள்ளாச்சியில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனு

பொள்ளாச்சி நகரப் பகுதியில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர். திருவள்ளுவர் திடல், தேர்நிலை திடல் பகுதிகளில் சிலை அமைக்க வலியுறுத்தப்பட்டது.



Coimbatore: பொள்ளாச்சி நகரப் பகுதியில் சட்டமேதை அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பொள்ளாச்சி நகரப் பகுதிகளான திருவள்ளுவர் திடல், தேர்நிலை திடல் போன்ற இடங்களில் அம்பேத்கர் சிலை அமைக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் சமூக இயக்கங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.



இந்நிலையில், இன்று பொள்ளாச்சி சார் ஆட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு முகாமில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல இணைச் செயலாளர் பிரபு தலைமையில் கட்சியினர் சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யாவிடம் மனு அளித்தனர்.

பொள்ளாச்சி நகரப் பகுதியில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...