கந்துவட்டி வழக்கில் காவல்துறை மீது குற்றச்சாட்டு: பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக பெண்கள் அமைப்பு போராட்டம்

கோவை காந்திமா நகரைச் சேர்ந்த சுசிலாவின் கந்துவட்டி வழக்கில் காவல்துறை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் மாவட்ட பொறுப்பாளர் பிலோமினா, காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.


Coimbatore: கோவை காந்திமா நகரைச் சேர்ந்த சுசிலா என்பவர் கந்துவட்டி பிரச்சினையில் சிக்கியுள்ளார். இது தொடர்பாக அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் கோவை மாவட்ட பொறுப்பாளர் பிலோமினா மற்றும் சுசிலா ஆகியோர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்க வந்தனர்.

பிலோமினா கூறுகையில், "கந்துவட்டிக்கு பணம் கொடுத்தவருக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். சரவணம்பட்டி காவல் நிலையத்தில் சுசிலா அளித்த புகார் மனு மீதான நடவடிக்கை குறித்து விசாரிக்க சென்றபோது, புகார் மனுவே இல்லை என்று காவல்துறையினர் கூறியது மிகவும் வருத்தம் அளிக்கிறது," என்றார்.

சுசிலா, MyV3 செயலியில் இணைய மறுத்ததால், கடனாக பெற்ற பணத்தை மகளின் திருமணத்திற்காக செலவழித்துள்ளார். மாதந்தோறும் ₹4,000 வட்டி செலுத்தி வந்த நிலையில், தற்போது ₹2,20,000 திருப்பி தர இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடன் கொடுத்தவர் சுசிலாவை தொந்தரவு செய்து, அவரது வீட்டை பூட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

பிலோமினா மேலும் கூறுகையில், "காவல் நிலையங்களில் கந்துவட்டி பிரச்சனையை சட்டபூர்வமாக அணுகாமல் கட்டப்பஞ்சாயத்து மூலமாக தீர்த்து வைப்பதால் இந்த கந்துவட்டி பிரச்சனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுசிலாவிற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்று போராடி வருகிறோம். சரியான நீதி கிடைக்காத பட்சத்தில் காவல்துறையை முற்றுகையிடவும் தயாராக உள்ளோம்," என எச்சரித்தார்.

காவல் ஆணையரின் உத்தரவுக்குப் பிறகே சுசிலாவின் வீடு திறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளை பெண்கள் அமைப்பினர் கவனமாக கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...