கந்துவட்டி வழக்கில் காவல்துறை மீது குற்றச்சாட்டு: பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக பெண்கள் அமைப்பு போராட்டம்

கோவை காந்திமா நகரைச் சேர்ந்த சுசிலாவின் கந்துவட்டி வழக்கில் காவல்துறை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் மாவட்ட பொறுப்பாளர் பிலோமினா, காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.


Coimbatore: கோவை காந்திமா நகரைச் சேர்ந்த சுசிலா என்பவர் கந்துவட்டி பிரச்சினையில் சிக்கியுள்ளார். இது தொடர்பாக அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் கோவை மாவட்ட பொறுப்பாளர் பிலோமினா மற்றும் சுசிலா ஆகியோர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்க வந்தனர்.

பிலோமினா கூறுகையில், "கந்துவட்டிக்கு பணம் கொடுத்தவருக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். சரவணம்பட்டி காவல் நிலையத்தில் சுசிலா அளித்த புகார் மனு மீதான நடவடிக்கை குறித்து விசாரிக்க சென்றபோது, புகார் மனுவே இல்லை என்று காவல்துறையினர் கூறியது மிகவும் வருத்தம் அளிக்கிறது," என்றார்.

சுசிலா, MyV3 செயலியில் இணைய மறுத்ததால், கடனாக பெற்ற பணத்தை மகளின் திருமணத்திற்காக செலவழித்துள்ளார். மாதந்தோறும் ₹4,000 வட்டி செலுத்தி வந்த நிலையில், தற்போது ₹2,20,000 திருப்பி தர இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடன் கொடுத்தவர் சுசிலாவை தொந்தரவு செய்து, அவரது வீட்டை பூட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

பிலோமினா மேலும் கூறுகையில், "காவல் நிலையங்களில் கந்துவட்டி பிரச்சனையை சட்டபூர்வமாக அணுகாமல் கட்டப்பஞ்சாயத்து மூலமாக தீர்த்து வைப்பதால் இந்த கந்துவட்டி பிரச்சனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுசிலாவிற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்று போராடி வருகிறோம். சரியான நீதி கிடைக்காத பட்சத்தில் காவல்துறையை முற்றுகையிடவும் தயாராக உள்ளோம்," என எச்சரித்தார்.

காவல் ஆணையரின் உத்தரவுக்குப் பிறகே சுசிலாவின் வீடு திறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளை பெண்கள் அமைப்பினர் கவனமாக கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...