கந்துவட்டி வழக்கில் காவல்துறை மீது குற்றச்சாட்டு: பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக பெண்கள் அமைப்பு போராட்டம்

கோவை காந்திமா நகரைச் சேர்ந்த சுசிலாவின் கந்துவட்டி வழக்கில் காவல்துறை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் மாவட்ட பொறுப்பாளர் பிலோமினா, காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.


Coimbatore: கோவை காந்திமா நகரைச் சேர்ந்த சுசிலா என்பவர் கந்துவட்டி பிரச்சினையில் சிக்கியுள்ளார். இது தொடர்பாக அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் கோவை மாவட்ட பொறுப்பாளர் பிலோமினா மற்றும் சுசிலா ஆகியோர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்க வந்தனர்.

பிலோமினா கூறுகையில், "கந்துவட்டிக்கு பணம் கொடுத்தவருக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். சரவணம்பட்டி காவல் நிலையத்தில் சுசிலா அளித்த புகார் மனு மீதான நடவடிக்கை குறித்து விசாரிக்க சென்றபோது, புகார் மனுவே இல்லை என்று காவல்துறையினர் கூறியது மிகவும் வருத்தம் அளிக்கிறது," என்றார்.

சுசிலா, MyV3 செயலியில் இணைய மறுத்ததால், கடனாக பெற்ற பணத்தை மகளின் திருமணத்திற்காக செலவழித்துள்ளார். மாதந்தோறும் ₹4,000 வட்டி செலுத்தி வந்த நிலையில், தற்போது ₹2,20,000 திருப்பி தர இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடன் கொடுத்தவர் சுசிலாவை தொந்தரவு செய்து, அவரது வீட்டை பூட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

பிலோமினா மேலும் கூறுகையில், "காவல் நிலையங்களில் கந்துவட்டி பிரச்சனையை சட்டபூர்வமாக அணுகாமல் கட்டப்பஞ்சாயத்து மூலமாக தீர்த்து வைப்பதால் இந்த கந்துவட்டி பிரச்சனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுசிலாவிற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்று போராடி வருகிறோம். சரியான நீதி கிடைக்காத பட்சத்தில் காவல்துறையை முற்றுகையிடவும் தயாராக உள்ளோம்," என எச்சரித்தார்.

காவல் ஆணையரின் உத்தரவுக்குப் பிறகே சுசிலாவின் வீடு திறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளை பெண்கள் அமைப்பினர் கவனமாக கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...