உடுமலை அருகே அரசு துவக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்

உடுமலை அருகே இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, அரசு திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.


Coimbatore: தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தலின்படி, பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் வழிகாட்டுதலின்படி, உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 50 சதவீதம் பள்ளிகளில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

உடுமலை இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில், ஆசிரியர் கண்ணபிரான் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கூட்டத்தின் பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்த பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா, பள்ளி மேலாண்மை குழுவின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.



விஜயா தனது உரையில், தமிழக அரசின் பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவற்றைப் பற்றியும், அரசுப் பள்ளிகளில் படிப்பதால் ஏற்படும் பல்வேறு நன்மைகள் குறித்தும் எடுத்துரைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் தாரணி, பள்ளி மேலாண்மை குழு ஆசிரியர், பெற்றோர், மாணவர் இடையே நல்லுறவை மேம்படுத்துவதாகக் கூறினார்.

கூட்டத்தில், பள்ளி மேலாண்மை குழுவின் நோக்கம் மற்றும் அரசுப் பள்ளிகளின் வளர்ச்சி ஆகியவை பற்றிய குறும்படங்கள் திரையிடப்பட்டன.



இக்கூட்டத்தில், புதிய பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சங்கீதா தலைவராகவும், பிரியா துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இல்லம் தேடிக் கல்வித் தன்னார்வலர், முன்னாள் மாணவர்கள் உட்பட மொத்தம் 24 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கூட்டத்தின் இறுதியில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் கோணீஷ்வரி நன்றியுரை வழங்கினார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...