உடுமலை அருகே அரசு துவக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்

உடுமலை அருகே இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, அரசு திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.


Coimbatore: தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தலின்படி, பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் வழிகாட்டுதலின்படி, உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 50 சதவீதம் பள்ளிகளில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

உடுமலை இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில், ஆசிரியர் கண்ணபிரான் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கூட்டத்தின் பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்த பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா, பள்ளி மேலாண்மை குழுவின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.



விஜயா தனது உரையில், தமிழக அரசின் பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவற்றைப் பற்றியும், அரசுப் பள்ளிகளில் படிப்பதால் ஏற்படும் பல்வேறு நன்மைகள் குறித்தும் எடுத்துரைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் தாரணி, பள்ளி மேலாண்மை குழு ஆசிரியர், பெற்றோர், மாணவர் இடையே நல்லுறவை மேம்படுத்துவதாகக் கூறினார்.

கூட்டத்தில், பள்ளி மேலாண்மை குழுவின் நோக்கம் மற்றும் அரசுப் பள்ளிகளின் வளர்ச்சி ஆகியவை பற்றிய குறும்படங்கள் திரையிடப்பட்டன.



இக்கூட்டத்தில், புதிய பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சங்கீதா தலைவராகவும், பிரியா துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இல்லம் தேடிக் கல்வித் தன்னார்வலர், முன்னாள் மாணவர்கள் உட்பட மொத்தம் 24 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கூட்டத்தின் இறுதியில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் கோணீஷ்வரி நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...