தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ஐசிசிஐ

விவசாய கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் தமிழக விவசாயிகள் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் ஆதரவுகள் பெருகி வருகின்றன. மேலும் தமிழக விவசாயிகளின் இந்த நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (ஏப்ரல் 25) தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டமும் நடைபெறவுள்ளது.

இந்த முழு அடைப்புப் போராட்டத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த வணிகர்கள் சங்கம், லாரி உரிமையாளர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், நடிகர் சங்கம், ஆட்டோ, பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, தற்போது ஐசிசிஐ கோயம்புத்தூர் சேப்டர்-வும் தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐசிசிஐ கோயம்புத்தூர் சேப்டர் தலைவர் வனிதா மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

தில்லியில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக போராடிவரும் தமிழக விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த போராட்டத்திற்கு ஐசிசிஐ கோயம்புத்தூர் சேப்டர் முழு ஆதரவு அளிக்கிறது.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளைச் சந்தித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவர்களின் கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைப்பதாக தெரிவித்துள்ளார். உடனடியாக விவசாயிகளுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும்.

இந்த முழு அடைப்பு போராட்டத்தில் வணிகர்கள், லாரி, ஓட்டல் உரிமையாளர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சியான திமுக-வும் ஆதரவு அளித்திருப்பதால் இந்த முழுஅடைப்பு வேலைநிறுத்தம் வெற்றியடைய வாய்ப்புகள் அதிகப்படியாக உள்ளது.

இந்தியாவின் முதுகெழும்பு விவசாயம் என்பதை வார்த்தைகயால் மட்டுமின்றி நடப்பிலும் உறுதிப்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் காலம் தாழ்த்தாமல் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்" என வனிதா மோகன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...