தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ஐசிசிஐ

விவசாய கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் தமிழக விவசாயிகள் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் ஆதரவுகள் பெருகி வருகின்றன. மேலும் தமிழக விவசாயிகளின் இந்த நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (ஏப்ரல் 25) தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டமும் நடைபெறவுள்ளது.

இந்த முழு அடைப்புப் போராட்டத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த வணிகர்கள் சங்கம், லாரி உரிமையாளர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், நடிகர் சங்கம், ஆட்டோ, பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, தற்போது ஐசிசிஐ கோயம்புத்தூர் சேப்டர்-வும் தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐசிசிஐ கோயம்புத்தூர் சேப்டர் தலைவர் வனிதா மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

தில்லியில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக போராடிவரும் தமிழக விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த போராட்டத்திற்கு ஐசிசிஐ கோயம்புத்தூர் சேப்டர் முழு ஆதரவு அளிக்கிறது.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளைச் சந்தித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவர்களின் கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைப்பதாக தெரிவித்துள்ளார். உடனடியாக விவசாயிகளுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும்.

இந்த முழு அடைப்பு போராட்டத்தில் வணிகர்கள், லாரி, ஓட்டல் உரிமையாளர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சியான திமுக-வும் ஆதரவு அளித்திருப்பதால் இந்த முழுஅடைப்பு வேலைநிறுத்தம் வெற்றியடைய வாய்ப்புகள் அதிகப்படியாக உள்ளது.

இந்தியாவின் முதுகெழும்பு விவசாயம் என்பதை வார்த்தைகயால் மட்டுமின்றி நடப்பிலும் உறுதிப்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் காலம் தாழ்த்தாமல் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்" என வனிதா மோகன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...