உக்கடம் புதிய மேம்பாலம் திறப்பு: நிறைவடையாத பணிகளால் போக்குவரத்து நெரிசல்

கோவையில் உக்கடம் புதிய மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், நிறைவடையாத பணிகள் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இரண்டு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.



Coimbatore: கோவை உக்கடத்தில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. இருப்பினும், மேம்பாலப் பணிகள் சில இடங்களில் இன்னும் நிறைவடையாததால், உக்கடம் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கேரளா, பழனி, பொள்ளாச்சி, ராமநாதபுரம், செல்வபுரம், ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால் போன்ற பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் நீண்ட வரிசையில் சுமார் இரண்டு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.



ரூ.481 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த மேம்பாலத்தில், கேரளா மற்றும் பொள்ளாச்சி வழியாக வரும் வாகனங்கள் ராமநாதபுரம் செல்ல வழி இல்லாததால், மேம்பாலத்தில் வரும் வாகன ஓட்டிகள் மீண்டும் உக்கடம் பேருந்து நிலையம் முன்பு இறங்க வேண்டியுள்ளது. இதனால், அனைத்து வாகனங்களும் உக்கடம் சந்திப்பில் குவிவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

போக்குவரத்து காவல்துறையினர் நெரிசலைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தாலும், தொடர்ந்து அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் நிலைமை கட்டுக்குள் வரவில்லை. முன்பு மேம்பாலம் இல்லாதபோது 30 நிமிடங்களில் கடக்கும் பாதையை, தற்போது இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகக் கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

திறப்பு விழாவின் போது, புதிய மேம்பாலத்தால் ஏழு நிமிடங்களில் சாலையைக் கடந்துவிடலாம் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போதைய நிலைமை வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...