பொள்ளாச்சி சார் ஆட்சியர் தலைமையில் நீர்ப்பாசன கண்காணிப்புக் குழு கூட்டம்

திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு குறித்த கண்காணிப்புக் குழு கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. நீர் திருட்டை தடுக்க பல்வேறு துறைகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று சார் ஆட்சியர் அறிவுறுத்தினார்.


கோவை: கோவை மாவட்டத்திற்கு விரைவில் திருமூர்த்தி அணையிலிருந்து இரண்டாம் மண்டல பாசன பகுதிகளுக்கு நான்கு சுற்றுகளாக தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இது தொடர்பாக கடை மடைக்கு நீர் செல்வதை முறைப்படுத்துவது மற்றும் நீர் திருட்டை தடுப்பது குறித்து கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

இன்று (09.08.2024) பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு பொள்ளாச்சி சார் ஆட்சியர் அ.கேத்திரின் சரண்யா, இ.ஆ.ப., தலைமை வகித்தார். கூட்டத்தில் வட்டாட்சியர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள், மின்சார வாரிய அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சூலூர் தாலுகா பகுதிகளுக்கும், கடைமடை பகுதியான வெள்ளக்கோவில், குண்டடம் மற்றும் உடுமலை பகுதிக்கு பாசன நீர் முறையாக செல்ல வேண்டியும், நீர் திருட்டை தடுக்கவும் நீர்வளத்துறையினருக்கு சார் ஆட்சியர் அறிவுறுத்தினார்.

மேலும், தண்ணீர் திருடப்படும் பகுதியில் மின்சாரம் துண்டிக்க நடவடிக்கை எடுக்கவும், கால்வாய் பகுதிகளில் தண்ணீர் திறந்து விடும் காலங்களில் காவல்துறை, வருவாய்த்துறை, நீர்வளத்துறை மற்றும் மின்சாரத்துறை ஆகிய துறை அலுவலர்கள் இணைந்து குழு அமைத்து தொடர் கண்காணிப்பில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டது. தண்ணீர் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் சார் ஆட்சியர் உத்தரவிட்டார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...