கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்தி இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. தினமும் 693 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஏப்ரல், மே மாதங்களில் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Coimbatore: கோவையில் சமீப நாட்களாக வெயில் மிகுதியாக உள்ளது. இதனால் மாநகராட்சி சார்பில் நகரில் அமைத்துள்ள சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்தி கணிசமாக அதிகரித்து வருகிறது.




மின் உற்பத்தியை பெருக்கவும், அதனால் ஏற்படும் மின் கட்டண செலவை ஈடுகட்டவும் சோலார் பேனல் திட்டத்தை கோவை மாநகராட்சி தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




சுமார் ரூ.1.45 கோடி மதிப்பீட்டில் உருவாக்கपட்ட இந்த திட்டம் 140 முதல் 154 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்டது. இதன் மூலம் தினமும் 693 யூனிட் மின்சாரம் தயாரிக்க முடியும். இது தவிர உக்கடம் புல்லுக்காட்டில் 3.6 மெகா வாட் திறன் கொண்ட சோலார் பேனல் பொருத்தப்பட்டுள்ளது.




இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "மாநகராட்சியின் மின்சார தேவையை பூர்த்தி செய்து, மின் செலவை குறைப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். பொதுவாக வெயில் காலங்களில் சூரிய ஒளி அதிகமாக கிடைப்பதால், சோலார் பேனல்கள் மூலமாக அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்" என்றனர்.




கோடை காலங்களில் ஒட்டு மொத்த உற்பத்தி இரண்டு மடங்கு அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சமீப காலமாக கோவையில் வெயில் அதிகரித்து வருவதால் மின்சார உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்னும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




இந்த சூழல் சார்ந்த திட்டம் மாநகராட்சியின் மின் கட்டண செலவை கணிசமாக குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...