வார இறுதியில் சுற்றுலா செல்வோம் பரளிக்காட்டிற்கு!

கோவையில் இருந்து 70 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பரளிக்காடு சுற்றுலாத்தலம். காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஒரு மலைக்கிராமம் தான் இந்த பரளிக்காடு. முழுக்க முழுக்க மலை வாழ் மக்களின் வாழ்வாதாரத்திற்காக உருவாக்கப்பட்ட பரளிக்காட்டில் சுமார் 100 குடும்பங்கள் வசிக்கின்றன.



பில்லூர் அணைக்கு செல்லும் நீர்பாதையில் இருந்து 2 கி.மீ தூரத்திற்கு பரிசல் சவாரி, மலையேற்றம் மற்றும் அத்திக்கடவு அருவி குளியல் முதலானவற்றை மலைவாழ் மக்களின் உதவியோடு சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்குகிறது காரமடை வனச்சரகம்.

இதற்காக சுற்றுலா பயணிகளிடம் ஒரு குறிப்பிட்ட தொகை பெற்று அந்த தொகை முழுவதும் அம்மலை வாழ் மக்களின் வாழ்வாதாரத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர் அங்குள்ள வன அதிகாரிகள். வாரத்தின் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

தற்போது, கோடை விடுமுறையை தொடர்ந்து பரளிக்காடு சுற்றுலா செல்லும் பயணிகள் தங்கள் முன்பதிவுகளை செய்த வண்ணம் உள்ளனர்.



பரளிக்காடு குறித்து காரமடை வனச்சரக வனவர் சுரேஷ் கூறுகையில், ‘பொருளாதார ரீதியான பிரச்சனைகள் மலைவாழ் மக்களுக்கு ஏற்படும் போது அவர்கள் எந்த ஒரு தவறான பாதையிலும் சென்றுவிடக்கூடாது என்ற நோக்கத்தில் பரளிக்காடு சுற்றுலாத்தலம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் பயணிகளிடம் வசூலிக்கப்படும் தொகை முழுவதும் மலைவாழ் மக்களின் கல்வி, வாழ்வாதாரம் போன்றவற்றிற்காக பயன்படுத்தப்படுகிறது.



இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மலைவாழ் மக்களே உணவு அளிக்கின்றனர். அதோடு, பரிசல் சவாரி மற்றும் மலையேற்றம் போன்ற கேளிக்கைகளும் உள்ளன. பயணிகள் தங்குவதற்கு விடுதியும் தற்போது கட்டப்பட்டுள்ளது" என்றார்.



தொடர்ந்து, தற்போது அங்கு சிறு சிறு குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதோடு, வன விலங்குகளை பார்வையிட, மகிழ மரங்களின் மீது பரன்களும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு சுற்றுலா செல்ல வனத்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும். தமிழ்நாடு வனத்துறையின் இணையதள பக்கத்தின் மூலம் இந்த முன் அனுமதியை பெற முடியும். விடுமுறையை முழுமையான இயற்கையோடு செலவிட நினைப்பவர்கள் ஒரு நாள் பரளிக்காடு சுற்றுலா செல்லலாம்..!

பரளிக்காட்டை போல கூச்சமரத்தூர் என்ற பகுதியும் சுற்றுலா செல்ல உகந்த இடமாக உள்ளது. இந்த பகுதிக்கு சுற்றுலா செல்பவர்கள் இரவு நேரத்தில் தங்கும் வகையிலான விடுதிகள் தற்போது தயாராகி வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...