கோவை வேளாண் பல்கலையில் மரபணு குளோனிங் பயிற்சி: இந்தியா, மலேசியா, இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்பு

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையில் மரபணு தனிமைப்படுத்தல், குளோனிங் பயிற்சி நான்கு நாட்கள் நடைபெற்றது. இந்தியா, மலேசியா, இங்கிலாந்தில் இருந்து 23 ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மையத்தின் தாவர உயிரி தொழில்நுட்பத் துறை சார்பில் நான்கு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

ஆகஸ்ட் 6 முதல் 9, 2024 வரை நடைபெற்ற இந்த பயிற்சி முகாமின் தலைப்பு "மரபணு தனிமைப்படுத்தல், குளோனிங் மற்றும் மூலக்கூறு பண்புகளின் இயல்பாய்வு ஆகியவற்றில் நேரடி பயிற்சி" என்பதாகும். இந்தியா, மலேசியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் இருந்து சுமார் 23 ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இந்த பயிற்சியில் பங்கேற்றனர்.

பயிற்சி முகாமின் தொடக்க விழா ஆகஸ்ட் 6 அன்று நடைபெற்றது. இதில் தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மைய இயக்குநர் முனைவர் N.செந்தில், ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் M.ரவீந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தாவர உயிரித் தொழில்நுட்பத் துறைத் தலைவரும், பேராசிரியருமான முனைவர் இ.கோகிலாதேவி வரவேற்புரை நிகழ்த்தினார்.

தொடக்க உரையில் பேசிய முனைவர் N.செந்தில், அனைத்து மூலக்கூறு உயிரியல் ஆய்வுகளுக்கும் ஜீன் குளோனிங் ஒரு முக்கிய நுட்பமாக இருப்பதை வலியுறுத்தினார். மேலும், பயிற்சித் திட்டம் பற்றிய மேலோட்டமான பார்வையையும், மரபணு குளோனிங்கின் அத்தியாவசிய திறன்களை மேம்படுத்துவதின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் M.ரவீந்திரன் பேசுகையில், திறமையான மனிதவள மேம்பாட்டை வளர்ப்பதில் இந்த வகையான மரபணு குளோனிங் பயிற்சியின் பங்கு குறித்து விளக்கினார். மேலும், மரபணு குளோனிங் மற்றும் ஆராய்ச்சித் துறையில் முன்னேற்றத்திற்கான ஜீனோமிக்ஸ் ஆகியவற்றில் நடைமுறை நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

தொடக்க விழாவில் பங்கேற்பாளர்களின் சுய அறிமுகமும் நடைபெற்றது. நிறைவாக, தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர் தகவலியல் துறையின் பேராசிரியரும் தலைவருமான முனைவர் எல்.அருள் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...