கோவில்பாளையத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: காவலர் போக்சோவில் கைது

கோவில்பாளையத்தில் எட்டாம் வகுப்பு மாணவியை மிரட்டி பணம் கேட்டு, பாலியல் தொல்லை கொடுத்த காவலர் ரவிக்குமார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் பெற்றோர் புகாரைத் தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்தது.


Coimbatore: கோவையை அடுத்த கோவில்பாளையம் பகுதியில் எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவில்பாளையம் பகுதியில் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனும் ஒரு மாணவியும் அண்மையில் தனியாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கோவில்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ரவிக்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் அந்த மாணவர்கள் இருவரும் தனியாக பேசிக்கொண்டிருப்பதை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து, அவர்களின் செல்போன் எண்ணையும் வாங்கினார்.

பின்னர் ரவிக்குமார் அந்த மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு அழைத்தார். அங்கு சென்ற மாணவியிடம் காவலர் ரவிக்குமார் பணம் கேட்டு மிரட்டியதுடன், ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து, மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் காவலர் ரவிக்குமார் மீது புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், காவலர் ரவிக்குமார் மாணவியிடம் பணம் கேட்டு மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதை அடுத்து, அவரை ஆகஸ்ட் 6 அன்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இச்சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது கண்டனத்திற்குரியது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...