கோவில்பாளையத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: காவலர் போக்சோவில் கைது

கோவில்பாளையத்தில் எட்டாம் வகுப்பு மாணவியை மிரட்டி பணம் கேட்டு, பாலியல் தொல்லை கொடுத்த காவலர் ரவிக்குமார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் பெற்றோர் புகாரைத் தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்தது.


Coimbatore: கோவையை அடுத்த கோவில்பாளையம் பகுதியில் எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவில்பாளையம் பகுதியில் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனும் ஒரு மாணவியும் அண்மையில் தனியாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கோவில்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ரவிக்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் அந்த மாணவர்கள் இருவரும் தனியாக பேசிக்கொண்டிருப்பதை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து, அவர்களின் செல்போன் எண்ணையும் வாங்கினார்.

பின்னர் ரவிக்குமார் அந்த மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு அழைத்தார். அங்கு சென்ற மாணவியிடம் காவலர் ரவிக்குமார் பணம் கேட்டு மிரட்டியதுடன், ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து, மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் காவலர் ரவிக்குமார் மீது புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், காவலர் ரவிக்குமார் மாணவியிடம் பணம் கேட்டு மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதை அடுத்து, அவரை ஆகஸ்ட் 6 அன்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இச்சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது கண்டனத்திற்குரியது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...