கோவில்பாளையத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: காவலர் போக்சோவில் கைது

கோவில்பாளையத்தில் எட்டாம் வகுப்பு மாணவியை மிரட்டி பணம் கேட்டு, பாலியல் தொல்லை கொடுத்த காவலர் ரவிக்குமார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் பெற்றோர் புகாரைத் தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்தது.


Coimbatore: கோவையை அடுத்த கோவில்பாளையம் பகுதியில் எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவில்பாளையம் பகுதியில் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனும் ஒரு மாணவியும் அண்மையில் தனியாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கோவில்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ரவிக்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் அந்த மாணவர்கள் இருவரும் தனியாக பேசிக்கொண்டிருப்பதை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து, அவர்களின் செல்போன் எண்ணையும் வாங்கினார்.

பின்னர் ரவிக்குமார் அந்த மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு அழைத்தார். அங்கு சென்ற மாணவியிடம் காவலர் ரவிக்குமார் பணம் கேட்டு மிரட்டியதுடன், ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து, மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் காவலர் ரவிக்குமார் மீது புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், காவலர் ரவிக்குமார் மாணவியிடம் பணம் கேட்டு மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதை அடுத்து, அவரை ஆகஸ்ட் 6 அன்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இச்சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது கண்டனத்திற்குரியது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...