பொள்ளாச்சியில் கலைஞர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

பொள்ளாச்சியில் காந்தி சிலை அருகில் திமுக நிர்வாகிகள் கலைஞர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரித்தனர். அம்பராம்பாளையம் சுங்கம் பகுதியிலும் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.


Coimbatore: பொள்ளாச்சியில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. காந்தி சிலை அருகில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் பல்வேறு திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னாள் ஒன்றிய அமைச்சரும், கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான மு. கண்ணப்பன், கழக மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் டாக்டர் மகேந்திரன், மாநில விவசாய அணி துணை தலைவர் தமிழ்மணி, கழக செயல்திட்ட குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ், நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், நகர மன்ற தலைவர் சியாமளா, வழக்கறிஞர் அணி தலைவர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



அதேபோல், அம்பராம்பாளையம் சுங்கம் பகுதியிலும் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இங்கு ஒன்றிய செயலாளர் யுவராஜ் தலைமையில் திரண்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப்படத்திற்கும், அவரது நினைவுச் சின்னமான பேனாவிற்கும் மரியாதை செலுத்தினர்.

தமிழகம் முழுவதும் திமுகவினர் கலைஞர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரித்து வருகின்றனர். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் அரசியல் பங்களிப்பையும், சமூக சேவையையும் நினைவு கூர்ந்து பல்வேறு இடங்களில் நினைவஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...