பொள்ளாச்சியில் கலைஞர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

பொள்ளாச்சியில் காந்தி சிலை அருகில் திமுக நிர்வாகிகள் கலைஞர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரித்தனர். அம்பராம்பாளையம் சுங்கம் பகுதியிலும் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.


Coimbatore: பொள்ளாச்சியில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. காந்தி சிலை அருகில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் பல்வேறு திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னாள் ஒன்றிய அமைச்சரும், கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான மு. கண்ணப்பன், கழக மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் டாக்டர் மகேந்திரன், மாநில விவசாய அணி துணை தலைவர் தமிழ்மணி, கழக செயல்திட்ட குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ், நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், நகர மன்ற தலைவர் சியாமளா, வழக்கறிஞர் அணி தலைவர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



அதேபோல், அம்பராம்பாளையம் சுங்கம் பகுதியிலும் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இங்கு ஒன்றிய செயலாளர் யுவராஜ் தலைமையில் திரண்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப்படத்திற்கும், அவரது நினைவுச் சின்னமான பேனாவிற்கும் மரியாதை செலுத்தினர்.

தமிழகம் முழுவதும் திமுகவினர் கலைஞர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரித்து வருகின்றனர். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் அரசியல் பங்களிப்பையும், சமூக சேவையையும் நினைவு கூர்ந்து பல்வேறு இடங்களில் நினைவஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...