வாயில் கருப்பு துணி கட்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தில்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கோவை மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் வாயில் கருப்புத் துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



விவசாய கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் தமிழக விவசாயிகள் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தேசிய விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கூறுகையில்,

வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் போராடிவரும் விவசாயிகளையும், தமிழகத்தையும் தொடர்ந்து மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவே இன்று நாங்கள் ஒன்றுகூடியுள்ளோம். இந்த போராட்டத்தில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து விவசாயிகள், கூட்டமைப்பு சங்கங்களும், நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர். 

தேசிய நதிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். வங்கிக் கடனை ரத்து செய்ய வேண்டும். வறட்சி பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அன்டை மாநிலங்களிலும், தமிழகத்திலும் கடும் வறட்சி நிலவி வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்திலும் புறநகர் பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இவை சீராக ஒரே வழி மத்திய அரசு தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதே ஆகும்.

காவிரியை சுத்தப்படுத்த 10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறிவருகிறது. ஆனால் அதற்கான எவ்விதப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. 10 ஆயிரம் கோடி ரூபாய் என்ன ஆனது எனவும் தெரியவில்லை.

பல ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்று ஏமாற்றியவருக்கு மூன்று மணி நேரத்தில் ஜாமின் கிடைக்கிறது. சில ஆயிரம் ரூபாய் வங்கிக்கடன் பெற்ற விவசாயிகளின் கழுத்து வங்கி நிர்வாகத்தால் நெரிக்கப்படுகிறது. எனவே, இந்தியா முழுவதும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, தனியார் வங்கியில் விவசாயிகள் பெற்ற கடனை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

முன்னதாக அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பினர் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் தங்களது வாயில் கருப்புத் துணி கட்டி ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...