கோவையில் நெகிழிக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்

கோவையில் நெகிழிக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை அமைச்சர் சு. முத்துசாமி தொடங்கி வைத்தார். மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக ஆறு மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுமக்களுக்கு நெகிழி பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 6) தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக நெகிழிக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை அமைச்சர் சு. முத்துசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உடனிருந்தார்.

இந்த பிரச்சார வாகனங்கள் "பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு" என்ற நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, "பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், துணிப்பையை உபயோகப்படுத்துவோம்" என்ற முழக்கத்துடன் இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.



இந்த பிரச்சார வாகனங்களில் சிறப்பு ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் பொதுமக்களுக்கு நெகிழி பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மாசு கட்டுப்பாட்டை மேலும் வலியுறுத்தும் வகையில், இந்த பிரச்சார வாகனங்கள் அனைத்தும் முழுவதும் மின்சார வாகனங்களாக உள்ளன.

பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து, அதற்கு பதிலாக காகிதம் மற்றும் துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த பிரச்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...